Friday, October 21, 2011

அன்புள்ளம் கொண்ட வெளிநாடுவாழ் மதுக்கூர் சகோதர்களுக்கு.,


அன்புள்ளம் கொண்ட வெளிநாடுவாழ் மதுக்கூர் சகோதர்களுக்கு.,

அஸ்ஸலாமு அலைக்கும்..(வரஹ்)..

அன்புள்ளம் கொண்ட வெளிநாடுவாழ் மதுக்கூர் சகோதர்களுக்கு.,

பேரூராட்சி மன்ற தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பில் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற N.S.M.பஷீர் அகமது B.A,B,L.,
ஆகிய எனக்கும் கவுன்சிலர் பொறுப்புகளுக்கு போட்டியிட்ட 15 வார்டு வேட்பாளர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்த மதுக்கூர் சகோதரர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.
மதுக்கூரில் உள்ள தாங்கள் குடும்பத்தாரையும், உறவினர்களையும், நண்பர்களையும் எங்களுக்கு வாக்களிக்கச்செய்த வெளிநாட்டில் வசித்துவரும் நமதூர் சகோதரர்களுக்கு நன்றி.
எங்கள் வெற்றிக்காக தங்களது கடுமையான வேலைப்பணிக்கிடையிலும் சொந்த முயற்சியில் இ-மெயில் மூலமும்,தொலைபேசி மூலமும் U.A.E. ல் ஆதரவு திரட்டிய சகோதரர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.
கடந்த 5 ஆண்டுகாலமாக செய்த நலத்திட்டப்பணிகளுக்கும், எங்களின் செயல்பாட்டுக்கும் கிடைத்த அங்கீகாரமாக இந்த வெற்றியை எடுத்துக்கொண்டு, நீங்கள் அனைவரும் எங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை காக்கும் விதத்தில் எங்களின் சீரிய செயல்பாட்டையும்,நேர்மையான -ஆடம்பரமற்ற சமுதாய பணியையும் தொடர்வோம் என உறுதிகூறுகிறேன்.
எங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையிலான ஆலோசனைகளையும்,குறைகள் இருப்பின் அதை சுட்டிக்காட்டியும் சகோதரர்கள் அனைவரும் இந்த இ-மெயில் மூலமாகவோ, எனது
மொபைல் மூலமாகவோ என்னை எந்நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்..
எனது வேண்டுகோள் கடிதத்தை உங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்பியது போல், இக்கடிதத்தையும் சகோதரர்கள் அனைவருக்கும் அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்

N.S.M.பஷீர் அகமது B.A,B,L.
பேரூராட்சி மன்ற தலைவர்.
தி.மு,க தேர்தல் பணிக்குழு.
மதுக்கூர் பேரூர்.
மொபைல் எண் :             0091-98651 40263      
nsm.basheer@yahoo.com

No comments:

Post a Comment