Sunday, October 23, 2011

ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகளே!

ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகளே!

அல்லாஹ் உங்களது ஹஜ் கிரியையை ஏற்றுக்கொண்டு உங்களை அன்று பிறந்த பாலகன் போல் எந்த பாவமும் செய்யாதவர்களைப் போல் ஆக்கிவிடுவானாக!
இஸ்லாத்தில் அதிக நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் 3 பள்ளிவாயல்களுக்கு பயணியுங்கள் என்று கட்டளை இடப்பட்டுள்ளது. அவை
1. மஸ்ஜிதுல் ஹராம்
2. மஸ்ஜிதுன் நபவி
3 .மஸ்ஜிதுல் அக்சா

இவற்றில் மஸ்ஜிதுல் ஹராத்தில் (சனத்தொகை அதிகரிப்பு காரணமாக) நுழையவே முடியாது, மேலும் மஸ்ஜிதுல் அக்சாவுக்குப் போனால் அங்கே இஸ்ரேலியர்களின் கொடுமை.
எனவே எம்மால் நன்மை தேடி செல்ல எஞ்சியிருப்பது மஸ்ஜிதுன் நபவி மாத்திரமே. அதிலும் நாம் அனேகமாக மக்கா, மதீனாவுக்கு செல்லக் கூடிய சந்தர்ப்பம் கிடைப்பது ஹஜ்ஜுடைய காலப்பகுதியிலேயே. ஹஜ்ஜு செய்துவிட்டு திரும்பும் போது ஹஜ்ஜுடைய நன்மையுடன் நம் ஊரில் தொழும் தொழுகையை விட 1000 , 100 000 மடங்கு நன்மையையும் பெற்றுக்கொண்டு வர எத்தணிக்காதவன் உண்மையாக துர்பாக்கியசாலியே. கஃபாவில் தொழ முடியாத உங்களுக்கு உள்ள ஒரே இடம் மஸ்ஜிதுன் நபவியாகும்.

எனவே ஹஜ்ஜு செய்துவிட்டு திரும்பும் போது தவறாமல் மஸ்ஜிதுன் நபவிக்கு சென்று தொழுது அதிக நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள்! மேலும் அங்கே உள்ள நம் (முஃமின்களின்) உயிரிலும் மேலான ரஸூல் (ஸல்) அவர்களின் கப்ரையும் ஜியாரத்து செய்யாமல் திரும்ப வேண்டாம். (அல்லாஹ்வும் ரசூலும் எந்த சந்தர்ப்பத்திலும் மஹ்ஷர் பெருவெளியிலும் இணை வைப்பதை அனுமதிக்க மாட்டார்கள். அப்படி இருக்க நாளை மறுமையில் நாம் யாநப்சீ யாநப்சீ யா ரசூலுல்லாஹ் எங்களை காப்பாற்றுங்கள் என்றே கூக்குரலிடுவோம். அதையும் ரஸூல் (ஸல்) அவர்கள் ஏற்று நமக்கு உதவி புரிவார்கள்.) அப்படிப்பட்ட நாயகத்தை தரிசிக்காமல் வீடு திரும்புபவனை விட ஒரு துர்ப்பாக்கியசாலி எந்த ஆலத்திலும் (உலகத்திலும்) இல்லை!
அப்படிப்பட்டவன் சொர்க்கத்தையே கண்முன்னே காட்டியும் புறக்கணித்தவன் போலாவான்.

என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் மத்தியில் உள்ளவை சொர்க்கத்துத் தோட்டங்களில் உள்ள ஒரு தோட்டமாகும் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜைது – ரலியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரீ)

ஹாஜிகளே! ஹஜ்ஜை முடித்துவிட்டோ அல்லது அதற்கு முன்போ ரசூலுல்லாஹ்வை தரிசியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக (அருள் என்பதே ரசூலுல்லாஹ்வை அன்றி ஏது? 21 :107 )

=================================================
மஸ்ஜிதுன் நபவியின் சிறப்புகள்:

என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகையைத் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர உள்ள பிற பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதைவிட நன்மையுடையதாகும்.

(அறிவிப்பவர் : அபுஹுரைரா -ரலியல்லாஹு அன்ஹு, நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)
----------------------------------------------------------------------------------------
என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகையைத் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர உள்ள பிற பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விட சிறப்பு மிக்கதாகும். மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகையைத் தொழுவது என்னுடைய இந்தப் பள்ளியில் நூறு தொழுகையைத் தொழுவதை விடச் சிறப்பு மிக்கதாகும்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் சுபைர் – ரலியல்லாஹு அன்ஹு, நூற்கள் : அஹமத், இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான்)
----------------------------------------------------------------------------------------
என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகையைத் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர உள்ள பிற பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறப்பு மிக்கதாகும். மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகையைத் தொழுவது அது தவிர உள்ள பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறப்பு மிக்கதாகும்.
(அறிவிப்பவர் : ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு, நூற்கள் : அஹமத், இப்னுமாஜா)
----------------------------------------------------------------------------------------
என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் மத்தியில் உள்ளவை சொர்க்கத்துத் தோட்டங்களில் உள்ள ஒரு தோட்டமாகும் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜைது – ரலியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரீ)

பிழைகள் இருப்பின் cmnt பண்ணவும்! — Abdul Basit மற்றும் 10 others பேர்களுடன்
பிடித்திருக்கிறது · · சனிக்கிழமை, 17:58 க்கு ·
Mohammad Illiyas, Hasan Kalifa மற்றும் வேறு 2 பேர்கள் ஆகியோரின் விருப்புக்குரியது.

Sufi Path ரஸூலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்:
“யார் என்னுடைய கப்ரை ஸியாரத் செய்வாரோ அவருக்கு என்னுடைய ஷபாஅத் கட்டாயம் கிடைக்கும்.”

(தாரகுத்னி)
23 மணி நேரம் முன்பு · பிடித்திருக்கிறது · 2 பேர்

Sufi Path ரஸூலுல்லாஹ் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்:
'யார் ஹஜ் செய்து விட்டு என்னை ஸியாரத் செய்யவில்லையோ அவர் என்னை நோவினை செய்துவிட்டார்.’

(தாரகுத்னி)

No comments:

Post a Comment